<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

திங்கள், 29 டிசம்பர், 2014

இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீடு என்ற மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி புதுவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, அதன் பங்குகளை மத்திய அரசு விற்கக்கூடாது, எல்.ஐ.சி. நிறுவனத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீடு என்ற மசோதாவை ரத்து செய்ய
வேண்டும உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 
புதுவையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஏ.சுப்பிரமணி,
உதவித் தலைவர் என்.கொளஞ்சியப்பன், இன்சூரன்ஸ் சங்கம் ஆர்.ராம்ஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிஎஸ்என்எல் ஐ பாதுகாக்ககோரி தமிழ்மாநிலம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் நடைபெற்ற படங்கள்

திங்கள், 22 டிசம்பர், 2014

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்ககோரி ஒருகோடி கையெழுத்து இயக்கம் துவக்கநிகழ்ச்சி மற்றும் சிறப்புக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.



பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்ககோரி ஒருகோடி கையெழுத்து இயக்கம் துவக்கநிகழ்ச்சி மற்றும் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.

பல மாதங்களாக நிரப்பபடாமல் காலியாக உள்ள இரண்டு சிஎம்டி இயக்குனர் பதவிகளை பிஎஸ்என்எல் நிர்வாகம் உடனே நிரப்ப வேண்டும்.முன்னேற்றம்,சிறந்த சேவை தருவதற்கு தேவையான கருவிகளை நிர்வாகம் வாங்க வேண்டும்.தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து  பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொத்துகளை மாற்ற வேண்டும்.மத்திய,மாநில அரசுதுறைகள்,பொதுத்துறைசேவைகளுக்கு பிஎஸ்என்எல் சேவையை கட்டாயபடுத்த வேண்டும்.தங்கு தடையில்லாமல் பிஎஸ்என்எல் சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு,  காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள்  சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு சார்பில்  ஒரு கோடி கையெழுத்து இயக்கம் பெற்று பிரதமரிடம் வழங்குவதற்கான சிறப்புக்கூட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.

பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற இக்கூட்டத்திற்கு , கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் பி.காமராஜ் தலைமை தாங்கினார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும்,கூட்டு நடவடிக்கைக்குழுவின் கன்வீனருமான ஏ.சுப்பரமணியன் அனைவரையும் வரவேற்றார்.ஏஐடியூசி மாநில செயலாளர் அபிஷேகம்,சிஐடியூ பிரதேச செயலாளர் நிலவழகன்,அண்ணா தொழிற்சங்க செயலாளர்  பாப்புசாமி,ஏஐசிசிடியூ மாநில செயலாளர் பாலசுப்புரமணியன், மறுமலர்ச்சி தொழிற்சங்க தலைவர் கப்ரியேல் ,எஸ்என்ஈஏ மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்புக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்கள்.திரளான ஊழியர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் , பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஒருகோடி  கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது,