<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

புதுச்சேரி, செப். 22- சென்னையில் இயங்கும் டெலிகாம் கூட்டுறவு சங்கத்தில் வட்டி வட்டி உயர்வை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டி உயர்வை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

C வட்டி விகிதத்தை 14.5 சதவீதத்தில் இருந்து 16 சதமாக உயர்த்தியதைத் திரும்பப் பெற வேண்டும். சங்க
உறுப்பினர்களுக்கு 88 ஏக்கர் நிலத்தை உடனே பிரித்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட்ம நடைபெற்றது.
பிஎஸ்என்எல் புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். துணைத்
தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் முருகையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் ஏராளமான பிஎஸ்என்எல்  ஊழியர்கள் பங்கேற்றனர்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

பக்ரித் பண்டிகை

பக்ரித் பண்டிகை விடுமுறை 24.09.2015 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வியாழன், 17 செப்டம்பர், 2015

கேரளாவில் இருந்து CSS ராவ் வெளியேற்றம்!!!


தமிழகத்தில் தர்ணா 16.09.2015 அன்று துணை டவர் நிறுவனம் அமைப்பதை கண்டித்து தமிழகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் ஒரு சில காட்சிகள்




CGM அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா சென்னை CGM அலுவலகத்தில் 16.09.2015 அன்று துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து FORUM சார்பாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் காட்சிகள்



பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் தர்னா புதுச்சேரி, செப். 16- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் புதன்கிழமை தர்னா போராட்டம் நடந்தது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரமைப்பு செய்யும் வகையில் அதிகாரிகள், ஊழியர்களுடன் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பேச்சின்படி ரூ.15000 கோடி அரசு வழங்க வேண்டும். தொலை தொடர்பு கோபுரங்களுக்காக பிபிஎன்எல் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கி பிஎஸ்என்எல்லை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளை மறைமுகமாக தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதைக்கண்டித்து தர்னா போராட்டம் பிஎஸ்என்எல் புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடந்தது. என்எப்டிஈ மாவட்ட தலைவர் பி.காமராஜ் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளரும்,ஒருங்கிணைப்பாளரருமான ஏ.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் என்.கொளஞ்சியப்பன், கே.அசோகராஜன், ஆர்.மதுசூதனன், எஸ்.ராஜநாயகம், பி.பெர்லின் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.






புதன், 16 செப்டம்பர், 2015

ஈரோடு நகரத்தின் வீட்டு வாடகைப்படி உயர்வு 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படிக்காக நகரங்களை தரம் உயர்த்துவதற்கான உத்தரவை BSNL கார்ப்பரேட் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நமது தமிழகத்தில் உள்ள ஈரோடு நகரம் ‘Y’ பிரிவு நகரமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஈரோடு நகரப் பகுதியில் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி 01.04.2015 முதல் 20% ஆக உயர்ந்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


JTO தேர்வு மற்றும் பயிற்சி தொடர்பாக…


சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் கேரள மாநில BSNLல் நடைபெற்று வரும் காட்டாட்சி தர்பாரை கண்டித்து சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு BSNLEU, SNEA(I) மற்றும் TNTCWU மாநில சங்கங்கள் சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டக் கூட்டத்தின் சில காட்சிகள்


ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கு 2013 - 2014 ஆண்டிற்கான போனஸ் போராட்ட வெற்றி !!!

BSNLEU --  TNTCWU  சங்கங்கள் - புதுவை

ஒப்பந்த ஊழியர்களுக்கு 2013 - 2014 ஆண்டிற்கான போனஸ் போராட்ட வெற்றி !!!

ஒப்பந்த ஊழியர்களுக்கு 2013 - 2014  போனஸ் வழங்காததைக் கண்டித்து  BSNLEU மற்றும்  TNTCWU  மாவட்ட சங்கங்கள் இணைந்து பலகட்ட போராட்டம் நடத்தினோம் . போராட்டத்தின்  போது நமது மாநில சங்கம் மற்றும் மாநில நிர்வாகத்தின் அறிவுருத்தலின் போரில் நமது ஒப்பந்த ஊரியர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது.

போராட்டத்திற்கு ஆதரவாகவும், பிரச்சனையில் தலையிட்டு வழிகாட்டிய மாநில சங்கத்திற்கும், மாநில நிர்வாகத்திற்கும், போராட்டத்திற்கு பிறகு நியாயத்தை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட ,ஆதரவாளித்த அனைவருக்கும் மாவட்ட சங்கங்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

                                                               தோழமையுடன்,


மகாலிங்கம், மாவட்ட செயலர்,TNTCWU .சுப்பரமணியன்,மாவட்ட செயலர்,BSNLEU      

சனி, 12 செப்டம்பர், 2015

சென்னை சொசைட்டி கடனுக்கான அநியாய வட்டி விகித உயர்வை வாபஸ் வாங்க கோரியும்,சொசைட்டி நிலத்தை நிலமாகவே பிரித்துத்தரக் கோரியும் செப்டம்பர் 15-ல் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்…அகில இந்திய Forumத்தின் செப்டம்பர் 16 தார்ணா போராட்டத்தை முன்னிட்டு செப்டம்பர் 22ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அனைத்து கிளைகளிலும் வலுவான ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டுகிறோம்.

Forum சார்பாக 16.09.2015 அன்று நடைபெற இருக்கிற மாபெரும் தர்ணா போராட்டத்திற்கான சுற்றறிக்கை

வியாழன், 3 செப்டம்பர், 2015

நாடு தழுவிய 02.09.2015 வேலை நிறுத்தம் - சில காட்சிகள்

நாடு தழுவிய 02.09.2015 வேலை நிறுத்தம் - சில காட்சிகள்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று(02.09.2015) தொலைத் தொடர்பு, வங்கி, மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், இன்ஸுரன்சு ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ..






பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி!!!!!!!