<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்காக 27.12.2017 அன்று காத்திருப்பு போராட்டம் BSNLEU மற்றும் TNTCWU கூட்டான அறைகூவல்

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை. BSNLEU மற்றும் TNTCWU மாநில சங்கங்கள் இன்று (22.12.2017) மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகர்களில் மாலை நேர தர்ணாவிற்கு அழைப்பு விடுத்திருந்தது. இன்று நன்பகல் இது தொடர்பாக CGM அலுவலகத்தின் பொது மேலாளர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த பேச்சு வார்த்தையில் தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் மாநில தலைவரும், உதவி பொது செயலாளருமான தோழர் S.செல்லப்பா, மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் தோழர் K.சீனிவாசன், மாநில உதவி தலைவர் தோழர் K.V.சிவகுமரன் ஆகியோரும் நிர்வாகத்தின் சார்பில் பொதுமேலாளர் (HR) திரு மோகன், திரு ராஜாராமன் (DGMA) மற்றும் திருமதி கிருஷ்ணபிரியா (AGM(SR) ஆகியோர் கலந்துக் கொண்டனர். மாநில தலைமை பொது மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் தேவையான நிதிக்கு கார்ப்பரேட் அலுவலகத்தில் பேசி உள்ளதாகவும், மாநில நிர்வாகம் இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறிய பொது மேலாளர் போராட்டத்தை ஒத்தி வைக்க கேட்டுக்கொண்டார். ஆனால் ஊதியம் கிடைக்காமல் போராட்டம் ஒத்தி வைக்க இயலாது என்று நமது சங்கத்தின் சார்பில் உறுதியாக அவரிடம் தெரிவித்தோம். இன்றும் ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே இன்று கூடிய BSNL ஊழியர் சங்கத்தின் மாநில மையக் கூட்டம் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தது. TNTCWU மாநில தலைவர்களிடம் விவாதித்து அடுத்த கட்ட போராட்டத்தை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் 27.12.2017 அன்று மாலை 4 மணி முதல் அனைத்து மாவட்ட பொது மேலாளர் அலுவலகங்களிலும் ”காத்திருப்பு போராட்டம்” நடத்த இரு மாநில சங்கங்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியருக்கும் ஊதியம் கிடைக்கும் வரை நாம் அலுவலகத்தில் காத்திருப்போம். எந்த பணிக்கும் - யாருக்கும் இடைஞ்சலாக இல்லாமல் இந்த போராட்டத்தை நடத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட இரண்டு மாவட்ட சங்கங்களும் ஊழியர்களை தயார்படுத்த வேண்டும் என இரண்டு மாநில சங்கங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்படும் ஒப்பந்த தொழிலாளர்களை பட்டினி போடும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். ஒன்று பட்டு போராடி ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வோம். இந்த முடிவினை அனைத்து மாவட்ட சங்கங்களும் உறுதியாக அமல்படுத்திட வேண்டும் என இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

வெள்ளி, 24 நவம்பர், 2017

Human chain programme was a grand success. The human chain programme, called on by the unions and associations yesterday, was a grand success. The programme was an unprecedented success in New Delhi. Similarly, as per the reports being received from each and every district, the human chain programme has been massively participated in by the employees. Naturally, the newly forged unity of all the unions and associations in BSNL, has generated a great amount of enthusiasm among both the Non-Executives and Executives throughout the country. This human chain programme foretells that the forthcoming 2 day strike, to be held on 12th and 13th of December is also going to be a total success. The CHQ of BSNLEU heartily congratulates the entire employees, as well as all the unions and associations for making the human chain programme a grand success.





Strike notice served for the two day strike. Today, the All Unions and Associations of BSNL, served on the CMD BSNL and the Secretary, DoT, notice for the two day strike, taking place on 12th and 13th December, 2017.


வியாழன், 16 நவம்பர், 2017

தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள் தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் 14.11.2017 அன்று காலை NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் தருவது, மனித சங்கிலி இயக்கம் மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ஆகிய இயக்கங்களை வெற்றிகரமாக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


டெல்லி மத்திய செயற்குழு முடிவுகள்



செவ்வாய், 14 நவம்பர், 2017

14.11.2017 அன்று நடைபெற்ற ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள்


தேசிய கவுன்சில் முடிவுகள்

















டெல்லியை திணறடித்த செங்கடல் Tuesday, 1




BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்


மனித சங்கிலி இயக்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது ஆகிய இயக்கங்களின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் அமலாக்கப்பட வேண்டும் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக 15.11.2017க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது மற்றும் 16.11.2017 அன்று மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. 14.11.2017 அன்று புது டெல்லி SEWA BSNL அலுவலகத்தில் நடைபெற்ற ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து, பல மாநிலங்களில் தயாரிப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், இந்த தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 23.11.2017 அன்று மதிய உணவு இடைவேளையில் மாவட்ட, மாநில, அகில இந்திய தலைநகர்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது 30.11.2017க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் வழங்குவது. இந்த மகஜரை மத்திய சங்கங்கள் ஓரிரு நாட்களுக்குள் தங்கள் இணைய தளங்களில் வெளியிடுவார்கள். கிடைத்துள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி இந்த இயக்கங்களை மேலும் சக்தி மிக்கதாக நடத்திடுவோம்.


புது டெல்லி மத்திய செயற்குழு




புது டெல்லி மத்திய செயற்குழு 07.11.2017 முதல் புது டெல்லி டாக்கா ஹோட்டலில் நடைபெற்று வரும் BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழுவின் முதல் நாள் காட்சிகள்


வியாழன், 2 நவம்பர், 2017

துணை டவர் நிறுவனம், ஊதிய மாற்றம் மற்றும் இதர செய்திகள்



ஓய்வூதிய மாற்றங்களும் இதர மத்திய சங்க தகவல்களும்



தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள் 31.10.2017 அன்று சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள SEWA BSNL அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தின் முடிவுகள்



புதன், 18 அக்டோபர், 2017

PLI தொடர்பான பேச்சு வார்த்தை 2015-16ஆம் ஆண்டிற்கான PLI வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2016 அன்று நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சூழலில் BSNLEU மற்றும் NFTE ஆகிய இரண்டு சங்கங்களையும் 16.10.2017 அன்று DIRECTOR (HR) அழைத்து PLI தொடர்பாக விவாதித்தார். நமது சங்கத்தின் சார்பாக தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy GS மற்றும் தோழர் R.S. சவுகான் VP ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்கு பின் PLI கமிட்டியின் கூட்டத்தை விரைவில் கூட்டி 2015-16 ஆம் ஆண்டிற்கு நிலுவையில் உள்ள PLI மற்றும் PLI வழங்குவதற்கான நிரந்தரமான ஒரு பர்முலா ஆகியவற்றை இறுதி செய்யுமாறு GM(SR) அவர்களுக்கு DIRECTOR(HR) உத்தரவிட்டுள்ளார்.


PLIஆக ரூ.7,000/- உடனடியாக வழங்க வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2017 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் தமிழக காட்சிகள் PLI வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் 13.10.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கார்ப்பரேட் அலுவலகம் 13.10.2017 அன்று காலை 08.30 மணிக்கு நமது பொது செயலாளரை தொலைபேசியில் அழைத்து மதியம் 12.30 மணிக்கு இது தொடர்பாக விவாதிக்க அழைத்தார். நமது பொது செயலாளர் கொல்கொத்தா தொலைபேசியின் மாநில மாநாட்டில் இருந்தார். துணை பொது செயலாளரும் டெல்லியில் இல்லை. எனவே, 16.10.2017 அன்று காலை அந்த விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் என நமது பொது செயலாளர் பதிலளித்துள்ளதுடன், கடைசி நேரத்தில் அழைப்பதை தவிர்த்து போதிய அவகாசம் கொடுத்து சங்கங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


தலைப்பைச் சேருங்கள்



ஊதிய மாற்றம் கோரி ஆர்ப்பரித்த ஊழியர்களும்.. அதிகாரிகளும்....




ஊதிய மாற்றம் கோரி ஆர்ப்பரித்த ஊழியர்களும்.. அதிகாரிகளும்.... ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அறைகூவலின் அடிப்படையில் 16.10.2017 அன்று தமிழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் சில காட்சிகள்-2




புதன், 11 அக்டோபர், 2017

PLI கோரி 13.10.2017 அன்று ஆர்ப்பாட்டம்


மதுரையில் தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக நடைபெற உள்ள கருத்தரங்கத்தின் சுவரொட்டி


உறுதியான ஒற்றுமை உருவானது- உறுதியானது ஊதிய மாற்றம்! அதற்கான போராட்டங்களை வெற்றிகரமாக்கிடுவோம்.



உரிய தேதியில் ஊதியம் பெற – ஒப்பந்த ஊழியர் போனஸ் பெற மாவட்டங்களில் - அக்டோபர் 9ல் களம் காண்போம்



பஞ்சப்படி உயர்வு மற்றும் சில செய்திகள்




துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்துவோம்



ஒப்பந்த தொழிலாளர்கள் பணி பாதுகாப்பை உறுதி செய்த ஈரோடு போராட்டம்